''ரணிலின் இங்கிலாந்து பயணம் உத்தியோகபூர்வமற்றது''
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக மேற்கொண்ட இங்கிலாந்து பயணம், உத்தியோகபூர்வமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28) அறிவித்தார்.36 மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்தார்.இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் 36 மணித்தியாலங்களுக்குள் உத்தியோகபூர்வமற்ற தனிப்பட்ட பயணத்திற்காக 166 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று பிற்பகல் 1.20 அளவில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கைது செய்யப்படவிருந்த நிலையில் வீட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.மேற்கோள் ஆரம்பம்மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுஇந்த சர்ச்சைக்குரிய பயணம், உத்தியோகபூர்வ பயணம் என தெரிவித்து சந்தேகநகநபரின் தரப்பு, வூல்வஹெம்ப்டன் பல்லைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.மேற்கோள் முடிவுவழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் நீதிமன்றத்தில் தௌிவுபடுத்தப்பட்டது.மேற்கோள் ஆரம்பம்மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுசந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க உத்தியோகபூர்வமற்ற ஒரு பயணத்திற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.மேற்கோள் ஆரம்பம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுமேற்கோள் ஆரம்பம்கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரமேற்கோள் முடிவு
