07 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதத்துடன் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த ஜனவரி 20ஆம் திகதி 2 படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.குறித்த மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டார்.இதனிடையே, நெடுந்தீவு கடற்பரப்பில் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.இதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவர் விடுவிடுக்கப்பட்டுள்ளார்.படகோட்டிக்கு 6 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.அபராதத் தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.மற்றுமொரு நபர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியமையினால் 2 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் இன்று தீர்ப்பளித்தார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 படகுகளுடன் 113 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
