මූලාශ්රයක්
ஜனாதிபதி நிதியத்தினால் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில் திட்டம்
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நாளை (23 ) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
