புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்தும் வேலைத்திட்டம்
தற்போது இலங்கையில் அதிகமாக டீசல் வலுசக்திப் புகையிரதங்கள் அதிகமாக இயங்குவதுடன், அதன் இயங்குநிலை வினைத்திறன் மற்றும் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக பெரும்பாலான புகையிரதப் பாதைகள், சமிக்ஞை முறைமைகள் மற்றும் அதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், நவீன மற்றும் நிலைபேறான புகையிரதப் போக்குவரத்து முறைமையை நிறுவும் நோக்கில், புதிய புகையிரதப் பாதைகளை நிர்மாணித்தல், இரட்டைப் பாதைகளை அமைத்தல், சமிக்ஞை முறைமைகளை மேம்படுத்தல் மற்றும் புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதை மையமாகக் கொண்டு புகையிரத அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சில இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
