ரணிலின் வௌிநாட்டு பயணம் தொடர்பில் விசாரணை நிறைவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.