இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின் அழைப்பின் பேரில், கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் நேற்று (2026 ஆகஸ்ட் 29) திருகோணமலை, சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்படி, எட்டு (08) மாத காலம் இடம்பெற்ற மிகக் கடினமான மரைன் பயிற்சியில் விருப்பார்வத்துடன் இணைந்து கொண்ட 36 கடற்படையினரைக் கொண்ட குழுவுடன் ஆரம்பிக்கப்பட்ட 10 ஆவது ஆட்சேர்ப்புப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்கான மரைன் படைப்பிரிவுப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான அதிகாரியினாலும் இடம்பெற்றது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின்
- ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே
- டபிள்யூ.எம்.ஜி.டி.பி. பண்டார
- குசல் திசாநாயக்க
- சஞ்சீவ கொடிக்கார
- அச்சல சில்வா
நிறுவனங்கள்- இலங்கை கடற்படை கப்பல் 'விதுர' நிறுவனத்தின்
- இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின்
- கிழக்கு கடற்படை கட்டளையின்
- கடற்படைத் தலைமையகத்தில்
இடங்கள்- Trincomalee
- சாம்பூரில்
- Sri Lanka
திறவுச்சொற்கள்- வெற்றிகரமாகப்
- படைப்பிரிவு
- அணிவகுப்பு
- வீரர்களின்
- பயிற்சியை
- வெளியேறல்
- பூர்த்தி
- மரைன்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.