கடற்படை மரைன் படைப்பிரிவு பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 36 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின் அழைப்பின் பேரில், கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் நேற்று (2026 ஆகஸ்ட் 29) திருகோணமலை, சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
