9,158 இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் ஆணையற்ற அதிகாரிகளுக்கு இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.1,440 சாதாரண சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் தரத்திற்கும் 2,339 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
