ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
தற்போது வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டலில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடு, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.