சரண குணவர்தனவிற்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) 16 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்தது.04 வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதியமைச்சருக்கு 72 வருட சிறைத்தண்டனையை விதித்ததுடன் அதனை ஒரே தடவையில் 16 வருடங்களில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.இதற்கு மேலதிகமாக இந்த 04 வழக்குகளுக்கும் சரண குணவர்தன 18 இலட்சம் ரூபா அபராதப் பணத்தையும் செலுத்த வேண்டும்.2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரண குணவர்தனவிற்கு எதிராக குறித்த 04 வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தது.2022ஆம் ஆண்டின் 1954ஆம் இலக்க இலஞ்ச அல்லது ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இந்த 04 வழக்குகளுக்கும் தொடர்புடைய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.முதலாவது வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதவான், பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக அறித்தார்.குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் இலகுவான தண்டனை தீர்ப்பை வழங்குமாறு இதன்போது சரண குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரஞ்சன் சில்வா கோரினார்.சமூகத்திற்கு முன்மாதிரியாக அமையும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தனி கேட்டுக் கொண்டார்.அசித அந்தனி - உதவிப் பணிப்பாளர் நாயகம்,இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள பின்னணியில் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு இலகுவான சிறைத்தண்டனையை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் ஏனைய 03 வழக்குகளை சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.அதற்கமைய, அந்த 03 வழக்குகளிலும் சரண குணவர்தனவை குற்றவாளியாக நிரூபித்து நீதிபதி தண்டனை தீர்ப்புகளை வெளியிட்டார்.நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பின் பிரகாரம், சரண குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் செல்லப்பட்டார்.
-556773.jpg)