''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடையவை என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று(11) தெரிவித்தார்.இந்த விடயங்கள் கடமை தவறியமை அல்லது வேறு விடயங்கள் சார்ந்தவை அல்லவென நீதவான் சுட்டிக்காட்டினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போதே நீதவான் இதனை தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் சுரேஷ் சலேவின் தொடர்புகளை வெளிப்படுத்தும் சில விடயங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீதான தாக்குதலை நடத்துவதற்காக சஹ்ரானின் குழுவினருக்கு தாக்குதலுக்கு முன்னதாக தகவல்களை சேகரித்துக் கொடுப்பதில் சுரேஷ் சலே நேரடியாக சம்பந்தப்பட்டு தனது தகவல் வழங்குநர் ஒருவரைப் பயன்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுபுலனாய்வு அதிகாரிக்கு ஒருவர் தகவல் வழங்குநரைப் பராமரிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் இருப்பதாக கோட்டை நீதவான் இதன்போது தெரிவித்தார்.இருப்பினும் ஒரு குற்றத்தின் சந்தேகநபராக மாறிய பின்னரும் அவ்வாறு பராமரிக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளனவா என நீதவான் கேள்வி எழுப்பினார்.சந்தேகநபராக மாறிய பின்னரும் அவ்வாறான பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதன்போது பதிலளித்தனர்.இதில் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புபட்ட விதம் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுஎதற்காக அவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டது என நீதவான் இதன்போது வினவினார்.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுஇதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவதற்காக சுரேஷ் சலே மேற்கொண்ட தலையீடுகள் குறித்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியது.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுமுன்னாள் பொலிஸ் மாஅதிபர் C.D.விக்கிரமரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த சொய்சா ஆகியோர் இது குறித்து சாட்சியமளித்துள்ளதாகவும் பாதுகாப்பு பேரவைக்கு அதிகாரிகளை அழைத்து சுரேஷ் சலே தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.ஒரு புலனாய்வு அதிகாரி எவ்வாறு பொலிஸ் மாஅதிபரை பாதுகாப்பு பேரவைக்கு அழைக்க முடியும் என நீதவான் இதன்போது கேள்வி எழுப்பினார்.அது ஜனாதிபதியால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு பேரவை கூட்டப்படுவதாகவும் அரச புலனாய்வு பணிப்பாளரின் சமர்ப்பணங்களுக்கு அமையவே அது முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைத்தார்.சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் வாதம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுஅந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பிரயோகித்த அழுத்தங்கள் என்னவென விசாரணை அதிகாரிகளிடம் நீதவான் வினவினார்.விசாரணை அதிகாரியின் விளக்கம்மேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவுஇதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை சந்திப்பதில் சட்டத்தரணிகளுக்கு பல்வேறு தடைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.நீதவானின் அறிவிப்புமேற்கோள் ஆரம்பம்மேற்கோள் நிறைவு
