அசைவ உணவு கேட்டு ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு!
ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி கொலை செய்த சம்பவத்தில், தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி கொலை செய்த சம்பவத்தில், தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று வார்ஜே பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மகேஷ் பகவத் கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் துணை ஆணையர் சாகர் கவாடே தெரிவித்தார். தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மகேஷ், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், தினமும் தனது பெற்றோரான பகவத் கெய்க்வாட் (64) மற்றும் பார்வதி கெய்க்வாட் (60) ஆகியோருடன் சண்டையிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.