1 ஊடகம்
2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்
அரலகங்வில கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்தது.அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் கந்தேகம பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
