மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் கவனஈர்ப்பு போராட்டம்!
மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்று (15) சித்தாண்டியில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
