மக்களுக்கு மிகவும் திறமையானதும் பயனுள்ளதுமான புகையிரத சேவையை வழங்கும் நோக்கில், 2027 - 2029 காலப்பகுதிக்காக பல்வேறு ரயில் சேவை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பு புறநகர் புகையிரதத் திட்டம், களனி பாலத்தை நவீனமயப்படுத்துதல், 10 ரயில் பாலங்களை (கொம்பனித்தெரு, நாரஹேன்பிட்ட, அளுத்கம, இந்துருவ, கிந்தோட்டை, தொட்டந்துவ, வெள்ளவத்தை, பிங்வத்தை, ஹிக்கடுவ, பாணந்துறை) புனரமைத்தல், இலங்கை புகையிரதச் சேவைக்காக 05 மின்சக்தி புகையிரதப் பெட்டித் தொகுதிகள் மற்றும் 05 டீசல் மின்சார இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- ௌரவ பிமல் ரத்நாயக்க
- பிமல் ரத்நாயக்க
- ரவி கருணாநாயக்க
நிறுவனங்கள்- கொழும்பு புறநகர் புகையிரதத் திட்டம்
திறவுச்சொற்கள்- நடைமுறைப்படுத்தத்
- காலப்பகுதிக்காக
- தயாரிக்கப்பட்டு
- காலப்பகுதியில்
- அபிவிருத்தித்
- திட்டங்களை
- பல்வேறு
- சேவை
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.