வறட்சியால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் இயற்கை சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றாடல் நட்பு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்கு இணையாக, தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள போனி குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டம், வடக்கு கடற்படை கட்டளையினால் 2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
