இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், மேதகு Khalid Hamoud Nasser Alkahtani அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2026 ஜூலை 16ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார். அத்தோடு, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்காகச் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்திற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Khalid Hamoud Nasser Alkahtani
- லாநிதி ஹரிணி அமரசூரிய
- Harini Amarasuriya
- Yasir Alhazemi
- சபுதந்திரி
- சாகரிகா போ
- பிர
இடங்கள்- Sri Lanka2
- சவூதி அரேபிய இராச்சிய
- பிய இராச்சிய
- இராச்சியம்
திறவுச்சொற்கள்- விடைபெற்றார்2
- இலங்கைக்கான2
- தூதுவர்2
- இராச்சியத்தின்
- அமரசூரியவை
- சந்தித்து
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு