இலங்கை மதுவரி திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் எஸ்.டி.சேனக சில்லா ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் (12) திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
