புதிய அரசாங்கத்தால் ரூ. 14.7 மில்லியன் முதலீட்டில் தபால் சேவையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்ட 11வது தபால் அலுவலகம் பொக்குனுவிட்டாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிப்பு
"தபால் சேவை என்பது, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் உற்பத்தித் துறைக்கும் வலுவூட்டும் ஒரு சேவையாக நிலைநிறுத்தப்படுகிறது" - சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ. களுத்துறை மாவட்டத்தில் உள்ள பொக்குனுவிட்ட மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மேலும் திறமையான மற்றும் தரமான தபால் சேவையை வழங்கும் நோக்கில், ரூ. 14.7 மில்லியன் செலவில் பொக்குனுவிட்டவில் கட்டப்பட்ட புதிய தபால் அலுவலகக் கட்டிடம், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று காலை (22) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
