இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு • இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 03 புதிய ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன • இணையவழி ஊடாக 03 பெய்லி பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
