ஜனாதிபதி, பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2025ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.48 ஆண்டுகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வரவு செலவு திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை ஆகியன குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானதாக ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டை போன்ற திட்டங்களை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.2025ஆம் ஆண்டை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையெனவும் பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில் அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் முடிந்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு சவாலான காலப்பகுதியாக அமைந்ததாகவும் அந்த சவால்களை வெற்றிகொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டுக்குள் கால்பதிப்பதாக பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-552494.jpg)