கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 60,000 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
மன்னார், சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் 2026 ஜூலை 09ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,448 இற்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள், 12 டிங்கி படகுகள் கடற்படையினர் கைப்பற்றினர்.
