அதிபர் சேவையின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
இலங்கை அதிபர் சேவையின் அதிகாரிகள் பல வருடங்களாகக் கோரி வந்த சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, அவர்களின் ஆரம்பச் சம்பளப் படியை முறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 03/2014 (I) என்ற புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.