மட்டக்களப்பில் சுற்றுலா வளர்ச்சிக்கு நியூசிலாந்தின் கவனம் – மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த உயர் ஸ்தானிகர்
- வருடத்திற்கு ஒரு இலட்சம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் - மட்டக்களப்பின் சுற்றுலா, மீன்பிடி மற்றும் அபிவிருத்தி குறித்து விரிவான கலந்துரையாடல் இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களை நேற்று (14) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
