மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல்
காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில
காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில
கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 என்ற மலேசிய வானூர்தி 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது. அதன் பின்னர் குறித்த வானூர்தியை தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்தநிலையில், 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று, குறித்த வானூர்தியை தேடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.