1 source
திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக பராமரிக்கப்படும் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
