அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எனப்படும் வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் போதுமான அளவு நீர் அருந்துமாறும் சாத்தியமான வேளைகளில் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக களைப்பை ஏற்படுத்தும் வௌிப்புற செயற்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
